search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டசபை ஒத்திவைப்பு"

    தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி முடிந்ததும், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகளும், புதிய அறிவிப்புகளும் இடம்பெற்றன.



    காலை 10 மணிக்கு தனது உரையைத் தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதியம் 12.39 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை வாசித்த அவர், பட்ஜெட்டுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெற்றுத் தரும்படி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

    இதையடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவடைந்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்றும் அவர் அறிவித்தார். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    புதுச்சேரியில் பட்ஜெட் மசோதாவுக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், சட்டசபைக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. #PuducherryAssembly
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.  அன்றைய தினம் நிதித்துறை பொறுப்பை வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மொத்தம் ரூ.7,530 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, கூட்டத் தொடரை இந்த மாதம் 27-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    ஆனால், மத்திய அரசு நேரடியாக நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருந்தது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான உத்தரவு பிறப்பித்தால் நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.



    இதை தவிர்க்க கூட்டத்தொடரை சுருக்கி 2 நாட்களில் நடத்தி முடிக்க முடிவெடுத்தனர். அதன்படி நேற்றுடன் பட்ஜெட் மீதான விவாதத்தை முடித்து, நேற்று இரவு பட்ஜெட் மசோதாவுக்கு சட்டசபையின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால், பட்ஜெட் மசோதாவுக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.  #PuducherryAssembly

    ×